நான் குமரியான பின்பு - என் வெள்ளைத்தோலுக்கு எல்லோருமே விண்ணப்பித்திருந்தீர்கள்....விலைமாதுவின் கண்ணீர்த்துளிகள்

விலைமாதுவின் கண்ணீர்த்துளிகள்......



நான் குழந்தையாய் இருக்கையில் - எனக்கு
பிச்சை கொடுக்க ஒருவரேனும் முன்வரவில்லை….

நான் குமரியான பின்பு - என் வெள்ளைத்தோலுக்கு
எல்லோருமே விண்ணப்பித்திருந்தீர்கள்.

என் சதையில் இருக்கும் பற்று – உங்களில்
ஒருவருக்காவது என் மனிதாபிமானத்தில்…
இல்லாமல் போனது ஏன்….?

பகலில் இராமர் வேசம் போட்டாலும்… இரவில்
கரிசனையோடு என் வீட்டுக்கதவு தட்டி
என் இளமையிலும் - இனிமை தடவிப்போனீர்கள்.

உங்களுக்கு உணர்வு சுரந்த போதல்லாம் ...
என்னிலே மூழ்கிப் போனீர்கள் நானும் தாராளமாய் சம்பாதித்தேன் ஒரு சிலர்… கடனும் வைத்தீர்கள்.

இப்போது என் இளமை கலைந்த பின்பு ஏன்…?
நீங்கள் - என்னிடம் வந்து போவதில்லை…

நான் திரும்பவும் குழந்தை மாதிரி
பிச்சை எடுக்க.. ஆரம்பித்துவிட்டேன்.


"தூவானத்தின் வெளிச்சம்"



                            : நெடுந்தீவு முகிலன்

No comments