பிரிவின் வலி...................!

பிரிவின் வலி...................!



முகத்திரையில் புண்னகையின் போலி சாயல்...
இறுகிய இதயத்தின் வலி உணர்த்தும் விழி...

கலக்கத்தின் விளக்கம் நீயென அறிவேன்
காதலின் பிரிவு மரணம் என புரிவேன்...

உன் கைவிரல் கோர்த்த விரல்களின் நடுக்கம்....
மீண்டும் சேர்க்க அவைகளின் ஏக்கம்...

பிரிவின் வலி வெளிக்காட்ட விருப்பமில்லை...
என் வாட்டம் கண்டு உன் சோர்வின் நிலைகானும் வலிமையில்லை...

காயம் மறைத்தாலும் கற்பனையில் நமது வாழ்க்கை....
கடந்து செல்கிறது இரு பிள்ளைகளின் கொஞ்சலுடன்...

எடுத்துரைத்தும் என் வலி உணர்வதும் இல்லை...
பனித்துளி என இரசிப்பதால் பூக்களின் கண்ணீர் தெரிவதுமில்லை...

இனி ஒரு பிறப்பெனில் உன் ஆசை தீர்க்கும் வரம் வேண்டும்..
இல்லை ஜடாமாக என் வாழ்க்கை முடியவேண்டும்.........


"என் தூவானம் வழியே தமிழ்சாரல்"

3 comments: