உன் கணவுகளை மெய்யாக்க கடல்தாண்டிய தொழில் எனக்கு......மனைவியின் துரோகம்.......

உன் கணவுகளை மெய்யாக்க
கடல்தாண்டிய
தொழில் எனக்கு


காதலித்து கரம்பிடித்த
கல்யாணவாழ்க்கை பாதியில் கசக்கிறதே...

நான் இருக்கும் நாட்டில் அரை குறை ஆடையில் 
விலைமாதுக்கள் ஏராளம்
பிடிக்கும் மட்டும் வாழ கன்னிகளோ தாராளம்....

கற்பனையிலும் நெருங்கியதில்லை 
கட்டிய மனைவி காத்திருப்பாள் என்ற மூட நம்பிக்கையில்

சுற்றத்தார் உரைத்தும் உற்றார் உறவினர் நண்பர்கள் உரைத்தும்
 துளியும் நம்பவில்லை
என் கற்புகரசியின் பத்திணித் தன்மையை...

காமத்தை விட காதலில் சிறந்தவள் 
என் கவிநாயகி என்ற எண்னத்தில்

இன்பத்தில் அதிர்ச்சி தர சொல்லாமல் வந்தேன்......
சொல்லியும் கேட்டாயா?
செருப்பால் அடித்தது சொந்தம்

என் படுக்கையில் பாதியை கொடுத்தாய்
உழைத்த பணத்தை முழுவதும் கொடுத்தாய்
கட்டிய சேலையை கசக்கிட கொடுத்தாய்
என் காதலையும் காமத்தில் கொடுத்தாய்.....

உனது கள்வனை..............................
நீ கட்டியனைத்த வேளை கழிவறை சுத்தம்
முத்தமிட்ட வேளை மரக்கறி தோட்டம்
விளக்கனைத்த வேளை மேலதிக வேலை
உடல் பசி தீர்த்த நேரம் எனக்கு தீராத வயிற்றுப்பசி
இதுவே உனக்கும் எனக்குமான நேரசூசி


"தூவானத்தின் கலக்கம்"

No comments